21. அன்புடைமை
ஆர்வம் உடையவர் காண்பர் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னைக்
கோர நெறி கொடு கொங்கு புக்காரே.
சிவத்தின் மீது உண்மையான ஆர்வம் உள்ளவர்கள் சிவபெருமானது திருவுருவத்தை காண்பர்கள்; மேலும் உள்ளத்தில் அன்பு, கருணை நிறைந்தவர்கள் இறைவனின் இணையடியினைக் காண்பர்கள்; ஆனால் மனத்திலே எல்லாவிதமான குடும்ப பாரங்களை கொண்டவர்கள், பாவத்தையே சம்பாதிப்பார்கள்; இவர்கள் கொடுமையான செயல்களைச் செய்து நரகமே புகுவார்கள்.
0 Comments