Subscribe Us

header ads

திருமந்திரம் - முதல் தந்திரம் - 7. இளமை நிலையாமை 2/10

பத்தாம் திருமுறை - இளமை நிலையாமை

பத்தாம் திருமுறை

முதல் தந்திரம்

7. இளமை நிலையாமை

பாடல் - 2/10

ஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்
பூண்டுகொண் டாரும் புகுந்தறி வார்இல்லை
நீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினுந்
தூண்டு விளக்கின் சுடரறி யாரே.

உலகில் பிறந்த உயிர்கள் பல ஆண்டுகள் இருந்தாலும், சிவபெருமானை தனது ஆன்மாவிற்குள் வைத்து அறிபவர்கள் எவரும் இல்லை. திரிநூல் போட்டு ஏற்றி தீபம் தூண்டுகோல் நீட்டி எரிய வைத்தாலும் அது திரிநூல் தீர்ந்த பிறகு தீபம் அனைந்து விடும் என்ற உண்மையை உயிர்கள் அறியாமல் இருக்கின்றது. திரி போன்ற உடன் உள்ளே தீபம் போல் இருக்கும் உயிர் பிறந்து வளர வளர எரியும் தீபத்தின் திரிநூல் தீர்ந்து விடுவது போல உடலும் இளமை மாறி முதுமை கூடி ஒரு நாள் அழிந்து போய்விடும்.

Post a Comment

0 Comments