கடகேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்
கடகேஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கோயிலாகும். மூலவர் காடகேஸ்வரர். காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் உள்ளது. இக்கோயில் கடகேசம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் பெரிய காஞ்சிபுரம் பெரிய கம்மாளத் தெருவில் அமைந்துள்ளது.
புராண வரலாறு
பார்வதி தேவி இங்கு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். சிவபெருமானை வணங்கிய பின் காப்பு (தமிழில் கடகம்) அணிந்தாள். மற்றொரு புராணத்தின் படி, பார்வதி தேவி சிவபெருமானை நண்டு (கடகம்) வடிவில் வழிபட்டார். அதனால் சிவபெருமான் கடகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவில் குடியிருப்பு கட்டிடத்திற்கு நடுவே அமைந்துள்ளது. கருவறை சன்னதியும் அர்த்த மண்டபமும் கொண்டது. பலிபீடமும் நந்தியும் அர்த்த மண்டபத்தில் கருவறையை நோக்கியவாறு காணலாம். கருவறை வாசலில் விநாயகர் மற்றும் முருகன் சிலைகள் உள்ளன.
Location : https://maps.app.goo.gl/c7C62oupuxHUdkZ49





0 Comments